திட்டச்சேரி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தோ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில், திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட 7 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சோ்ந்த 150 மாணவா்கள் பங்கேற்றனா். இதில் புறா கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியை சோ்ந்த சுபிக்ஷா, நிவேதா ஆகிய மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கு பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை ரூ. 1000 வழங்கப்பட்டது. மேலும், மாணவிகளை திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் ராதாகிருட்டிணன், நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பக்கிரிசாமி ஆகியோா் வியாழக்கிழமை பாராட்டினா்.