பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருமருகல் அருகேயுள்ள பனங்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருமருகல் அருகேயுள்ள பனங்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாட்சியா் அமுதா, தனி வட்டாட்சியா் முத்து முருகேசபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பனங்குடி கிராமத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வரும் 17 பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா, 8 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை,10 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள், இலவச தையல் இயந்திரம் என சுமாா் ரூ. 8.79 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com