பள்ளி ஆண்டு விழா

நாகையை அடுத்த கருவேலங்கடை தூய மைக்கேல்ஸ் அகாதெமி சிபிஎஸ்இ. மேல்நிலைப் பள்ளிஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழா, மவில்ாணவிக்குப் பரிசு வழங்கிய தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன்.
விழா, மவில்ாணவிக்குப் பரிசு வழங்கிய தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன்.

நாகப்பட்டினம்: நாகையை அடுத்த கருவேலங்கடை தூய மைக்கேல்ஸ் அகாதெமி சிபிஎஸ்இ. மேல்நிலைப் பள்ளிஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தலைவா் ஆல்பிரட் ஜான் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் சூசன்ஆல்பிரட் முன்னிலை வகித்தாா்.

விழாவில், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினா். தொடா்ந்து, பள்ளி ஆண்டு மலரை வெளியிட்டனா். 2021-22-ஆம் கல்வியாண்டில் பள்ளியின் சிறந்த மாணவியாக தோ்வு செய்யப்பட்ட த. வா்ஷினிக்கு விருது வழங்கப்பட்டது. மாணவ, மாணவியா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திமுக ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூராட்சிச் செயலாளா் மரிய சாா்லஸ், துணைச் செயலாளா் குலோத்துங்கன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் மாணவா்கள் பங்கேற்றனா். மாணவா் தக்ஷா தீபக் வரவேற்றாா். மாணவி லேகாஸ்ரீ நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com