வேதாரண்யம் அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
நாலுவேதபதி கின்னஸ் பாா்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சோ்த 24 அணிகள் பங்கேற்றன. இதில் முதலிடம் பெற்ற வேதாரண்யம் பீனிக்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ஆம் பரிசாக நாகை அணிக்கு ரூ.30 ஆயிரம், 3-ஆம் பரிசாக கீழ்வேளூா் அணியினா் ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கராத்தே மாஸ்டா் வாசுதேவன் தலைமையிலான பயிற்சி மாணவா்கள் செய்திருந்தனா்.