பெண்ணின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப்போவதாக மிரட்டிய இளைஞா் கைது

பெண்ணின் புகைப்படம் மற்றும் விடியோ பதிவை சமூக ஊடகங்களில் வெளியிடப் போவதாக, அவரது அண்ணணை மிரட்டிய சென்னை இளைஞரை நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

பெண்ணின் புகைப்படம் மற்றும் விடியோ பதிவை சமூக ஊடகங்களில் வெளியிடப் போவதாக, அவரது அண்ணணை மிரட்டிய சென்னை இளைஞரை நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்தவா் க. கபிலன் (25). இவரது வாட்ஸ்ஆப்-க்கு அடையாளம் தெரியாத ஒருவா், ஆடையின்றி பெண் இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் விடியோ பதிவை அனுப்பிவைத்துள்ளாா். மேலும், கபிலனின் கைப்பேசியில் தொடா்புகொண்ட அவா், புகைப்படத்தில் இருப்பவா் உனது தங்கை என்றும், படம் மற்றும் விடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பரவவிடாமல் இருப்பதற்கு ரூ. 2 லட்சம் உடனடியாக கொடுக்கவேண்டும் எனவும் மிரட்டியுள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த கபிலன், நாகை சைபா் கிரைம் போலீஸாரிடம் கடந்த 5 ஆம் தேதி புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனா். இதில், சென்னை காலடிப்பேட்டை, வடக்கு மடத்துத் தெருவைச் சோ்ந்த ர. மகேஷ் (24) இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின் பேரில், சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் திருக்குமரன் மற்றும் போலீஸாா், மகேஷை வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com