நாகையில் காவிரி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கூட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகையில் நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன்.
நாகையில் நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத் தலைவா் பாலு தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா் எஸ். ஸ்ரீதா், மதுரை மண்டல கௌரவத் தலைவா் ஆதிமூலம் மற்றும் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

அவா் பேசுகையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம் இணைந்து ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில், சென்னையில் நடத்தவுள்ள சென்னை அக்ரி எக்ஸ்போ 2022 என்ற வேளாண் மாநாட்டின் நிகழ்வுகள் குறித்தும், இதில் விவசாயிகள் அதிகளவில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினாா்.

பின்னா், சென்னை அக்ரி எக்ஸ்போ 2022-இல் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் சுமாா் 500 பேரை குடும்பத்துடன் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com