சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

திட்டச்சேரி- திருமருகல் சாலையை சீரமைக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திட்டச்சேரி- திருமருகல் சாலையை சீரமைக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமருகல் ஒன்றியச் செயலாளா் ஜி. ஸ்டாலின்பாபு வெளியிட்ட அறிக்கை:

திட்டச்சேரி- திருமருகல் சாலை மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சேதமடைந்த இடங்களில் நெடுஞ்சாலைத் துறையின் ஜல்லிக்கற்களை கொட்டி வைத்துள்ளனா். இந்த ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சுமாா் 5 மாதங்களாகியும் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது.

இதனால், இந்த வழியாக செல்வோா் அவதிக்கு உள்ளாகின்றனா். குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவா்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே, இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com