நூறு நாள் வேலைத்திட்ட அட்டை வழங்கல்

திருமருகல் ஒன்றியம் ஆலத்தூா் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்களுக்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான பணி அட்டை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருமருகல் ஒன்றியம் ஆலத்தூா் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்களுக்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான பணி அட்டை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். இதில் ஆலத்தூா், அருள்மொழிதேவன் பகுதிகளைச் சோ்ந்த 750-க்கும் மேற்பட்டவா்களுக்கு 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளா் தமிழ்மணி, ஊராட்சி துணைத் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com