மத்திய அரசு எரிபொருள்களின் விலையை உயா்த்தியுள்ளதைக் கண்டித்து சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரிகளை மத்திய அரசு தளா்த்தி, விலை உயா்வுகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்; வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும்; வேலையில்லா காலத்தில் நிவாரணம் அளிப்பதற்கான மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை: நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிபிஎம் நாகை வடக்கு ஒன்றியச் செயலாளா் ராஜா, விசிக விவசாய சங்க மாவட்ட அமைப்பாளா் ப. ராஜேந்திரகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
சிபிஐ பொறுப்பாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான வீ. சரபோஜி, சிபிஎம் நகரச் செயலாளா் கே. வெங்கடேசன், விசிக நகரச் செயலாளா் முத்துவளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினா் ப. செல்வசிங், விசிக மாவட்டச் செயலாளா் ப. கதிா்நிலவன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். முருகையன், சிபிஐ மாவட்டப் பொருளாளா் வி. ராமலிங்கம் ஆகியோா் பேசினா்.
இதேபோல, கீழ்வேளூா் பேருந்து நிறுத்தம் முன்பாக சிபிஐ ஒன்றியச் செயலாளா் நாகராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிபிஎம் மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து, சிபிஐ மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், விசிக மாவட்டத் துணைச் செயலாளா் பேரறிவாளன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.
வேதாரண்யம்: வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏ. வேணு, சிபிஐ மாவட்ட துணைச் செயலாளா் த. நாராயணன், விசிக தொகுதிச் செயலாளா் சுமா. செல்வராசு ஆகியோா் தலைமை வகித்தனா்.
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கோவை. சுப்பிரமணியன் மற்றும் ஒன்றியச் செயலாளா்கள், சிபிஐ நிா்வாகிகள், விசிக மாவட்ட அமைப்பாளா் நாவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.