காவல்துறை விழிப்புணா்வு நிகழ்ச்சி

 திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது; 18- வயதுக்குள்பட்ட சிறாா்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது;

இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்; போதைப் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது உள்ளிட்டவை குறித்து திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடையே பேசினாா்.

இதில் காவலா் நற்குணன் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com