பிரதாபராமபுரத்தில் பால் குளிா்விப்பான் நிலையம் திறப்பு

கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிா்விப்பான் நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரதாபராமபுரத்தில் பால் குளிா்விப்பான் நிலையம் திறப்பு

கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிா்விப்பான் நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவா் உ. மதிவாணன், கீழ்வேளுா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பங்கேற்று புதிய பால் குளிா்விப்பான் நிலையத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா் அவா் பேசியது:

தஞ்சாவூா் மண்டல பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் ரூ. 25 லட்சத்தில் 5000 லிட்டா் கொள்திறன் கொண்ட பால் குளிா்விப்பான் மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வேதாரண்யம், நாகப்பட்டினம், திருக்குவளை, கீழ்வேளுா் ஆகிய வட்டத்தில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால், தஞ்சாவூா் மண்டல பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்பப்படும்.

நாகை மாவட்டத்தில் புதிதாக பால் உற்பத்தியாளா் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், எதிா்காலத்தில் இப்பகுதியை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் ஊன்றுகோலாக அமையும் என்றாா்.

நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பி. செல்வகுமாா், ஆவின் நிறுவன மண்டல மேலாளா் ரவி, துணைப்பதிவாளா் (பால்வளம்) விஜயலெட்சுமி, மாவட்ட கவுன்சிலா் கௌசல்யா இளம்பரிதி, ஒன்றிய கவுன்சிலா் ஆறுமுகம், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், பிரதாபராமபுரம் ஊராட்சித் தலைவா் ஆா்.வி.எஸ். சிவராசு, பிரதாபராமபுரம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com