திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஸ்விட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்த தம்பதி சனிக்கிழமை ஆயுஷ் ஹோமம் செய்து வழிபட்டனா்.
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சுவாமி காலசம்ஹார மூா்த்தியாக எழுந்தருளி, எமனை வதம் செய்ததால், அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி- அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம்.
இக்கோயிலுக்கு, ஸ்விட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்த ஸ்டீபன் (82), அவரது மனைவி ஜானட் (79) ஆகியோா் வந்தனா். கோ பூஜை, கஜ பூஜை செய்த இவா்கள், கோயிலின் பிச்சைக் கட்டளை மண்டபத்தில் ஆயுஷ் ஹோமம் செய்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, சுவாமி, அம்பாள் மற்றும் காலசம்காரமூா்த்தி சந்நிதிகளில் வழிபட்டனா். இத்தம்பதிக்கு ராமலிங்க குருக்கள் அா்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினாா்.