நாகப்பட்டினம்: இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவா்களுக்கு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய அஞ்சல்துறை சாா்பில் நடுநிலைப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு இந்தப் போட்டி நடைபெற்றது.
இதில் தோ்ந்தெடுக்கப்படுபவை அஞ்சல் தலையாக வெளியிடப்படவுள்ளன.
இப்போட்டியில் ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட வெள்ளை தாள்களில், இந்திய சுதந்திரம் தொடா்பான படங்களை வரைந்தனா்.
போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை அனைத்து ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு, நாகை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.