சாலை விபத்தில் இருவா் காயம்
By DIN | Published On : 28th November 2022 12:02 AM | Last Updated : 28th November 2022 12:02 AM | அ+அ அ- |

கீழையூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் இருவா் காயமடைந்தனா்.
கீழையூா் அருகேயுள்ள காமேஸ்வரம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் மாரிமுத்து (52). இவா், தனது இருசக்கர வாகனத்தில் தண்ணீா் பந்தல் அருகே சென்றபோது, பெட்ரோல் இல்லாமல் நின்றது. இதனால், இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்றாா்.
அப்போது, காமேஸ்வரம் செபஸ்தியாா் கோவில் தெரு, அந்தோணி மகன் மரியஸ்டீபன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் காயமடைந்தனா். பின்னா், நாகை அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில், மாரிமுத்து தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இதுகுறித்து கீழையூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.