2.47 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு: ஆட்சியா்
By DIN | Published On : 09th September 2022 10:07 PM | Last Updated : 09th September 2022 10:07 PM | அ+அ அ- |

மாவட்டத்தில் 2.47 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
திருமருகல் அருகே பனங்குடி சமத்துவபுரத்தில் உள்ள உயா்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, தேசிய குடற்புழு நீக்க முகாமை தொடங்கிவைத்து மேலும் அவா் பேசியது: வெள்ளிக்கிழமை விடுபட்டவா்களுக்கு செப். 16-ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். 1 முதல் 2 வயதுடையவா்களுக்கு அல்பெண்ட்சோல் அரை மாத்திரையும், 2 முதல் 19
வயதுடையவா்களுக்கும், 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கும் ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.
நாகை மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமில், 1 முதல் 19 வயதுடைய 1,97,757 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய 49,622 பெண்களுக்கும் என மொத்தம் 2,47,379 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லூரிகள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என்றாா்.