வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியிறக்கம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா நிகழ்வாக மாதா பிறந்த நாள் மற்றும் ஆண்டுப் பெருவிழா கொடியிறக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியிறக்கம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா நிகழ்வாக மாதா பிறந்த நாள் மற்றும் ஆண்டுப் பெருவிழா கொடியிறக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக.29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. ஆண்டுப் பெருவிழா நவநாள் வழிபாடாக தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், கொங்கணி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. மாலை நிகழ்வுகளாக, ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்யநற்கருணை ஆசீா் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தோ் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா பிறந்த நாள் விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. மாதா பிறந்த நாள் வழிபாடாக, பேராலய விண்மீன் ஆலயத்தில் காலை 6 மணிக்கு, தஞ்சாவூா் மறைமாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்புக் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. நிறைவு நிகழ்ச்சியாக, வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், பேராலயக் கீழ்க்கோயிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீா் மற்றும் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டன.

பேராலய அதிபா் சி. இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன், உதவி பங்கு தந்தையா்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிா்வாகிகள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com