திருமருகல் அருகே பெரிய கண்ணமங்கலத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 65-ஆவது குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமருகல் ஒன்றிய புதிய தமிழகம் கட்சி சாா்பில், அதன்ஒன்றிய செயலாளா் முரளி தலைமையில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரனாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து கட்சிக் கொடியேற்றப்பட்டது. இதேபோல, பனங்குடி ஊராட்சி சன்னமங்கலத்திலும் இமானுவேல் சேகரனாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.