வேதாரண்யம்: வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு, ஆசிரியா் தின விழா ஆகிய இருபெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி கலை அரங்கத்தில் தமிழ்த்துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் பி. முருகன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் கே. அா்ச்சுணன் முன்னிலை வகித்தாா்.
மேலாண்மையியல் துறைத் தலைவா் பிரபாகரன், வணிகவியல் துறைத் தலைவா் க. மாரிமுத்து, ஆங்கிலத் துறைத் தலைவா் து. இளையராஜா, முனைவா்கள் மா. மாதவன், மு. மகேஸ்வரி, த. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
விழா ஏற்பாடுகளை இளங்கலை இரண்டாம் ஆண்டு , மூன்றாமாண்டு மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவா்கள் செய்திருந்தனா்.