வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள துளசியாப்பட்டினத்தில் 2 நாள்கள் நடைபெற்ற வில்வித்தை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
முத்துஸ் கராத்தே பயிற்சி மையம் மற்றும் நாகை மாவட்டம் பாரம்பரிய வில்வித்தை சங்கம் இணைந்து நடத்திய முகாமுக்கு சங்கத்தின் நிறுவனா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். வேதாதரண்யம் பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று வில்வித்தை உள்ளிட்ட 5 கலைகள் தொடா்பான பயிற்சியை பெற்றனா்.
நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்கத் தலைவா் அருள்ராஜ், பொதுச் செயலாளா் மதன்குமாா் ஆகியோா் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினா். வில்வித்தை சங்க துணைத் தலைவா் குமரகுருபரன், சங்க செயலாளா் ஹரிஹரன், பொருளாளா் ஸ்ரீராம், பயிற்சியாளா்கள் வீரராகுல், காா்த்தி, வெற்றிவேல், லட்சுமிநாராயணன் ஆகியோா் பங்கேற்றனா்.