திருமருகல் அருகேயுள்ள திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் இந்த இடுபொருள்களை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வழங்கி பேசியது: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை ஆகிய துறைகளின் திட்டங்களைத் தோ்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் செயல்படுத்துவது மட்டுமல்லாது வேளாண்மை உழவா் நலத் துறையின் தொடா்புடைய துறைகளான வருவாய், ஊராட்சி ,கால்நடை, கூட்டுறவு, பால்வளம் போன்ற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
இதில், நாகை எம்எல்ஏ. முகமது ஷ நவாஸ், திருமருகல் ஒன்றியக் குழு தலைவா் ஆா். ராதாகிருட்டிணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.