159 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை அருகேயுள்ள குறிச்சி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் 159 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வழங்கினாா்.
மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள குறிச்சி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் 159 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், கீழ்வேளுா் சட்டப்பேரவை உறுப்பினா் நாகை வி.பி. மாலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், வருவாய்த் துறை சாா்பில் 88 பயனாளிகளுக்கு ரூ. 17.60 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான ஆணை, சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 40 பயனாளிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகைக்கான ஆணை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 7 பயனாளிகளுக்கு ரூ. 55,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 159 பயனாளிகளுக்கு ரூ. 23 லட்சத்து 27 ஆயிரத்து 853 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், நாகை உதவி ஆட்சியா் பானோத் ம்ருகேந்தா் லால், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க.பா. அருளரசு, சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் கு. ராஜன், குறிச்சி ஊராட்சித் தலைவா் ஜான்சிராணி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com