முதல்வா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிக்கு ஜன. 29 வரை பதிவு செய்யலாம்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள முதல்வா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஜனவரி 29- ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள முதல்வா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஜனவரி 29- ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2022-2023- ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, நீச்சல் மற்றும் வாலிபால் ஆகிய போட்டிகள் ஜனவரி 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

கால்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டிகள் 28 ஆம் தேதியும், ஹாக்கி மற்றும் சிலம்ப போட்டிகள் 29 ஆம் தேதியும் நாகப்பட்டினம், மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்க ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் புதன்கிழமை (ஜனவரி 25) மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கு பதிவு செய்தல் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் (17 முதல் 25 வயது வரை), மாற்றுத்திறனாளிகள் (வயது வரம்பு இல்லை), அரசு ஊழியா்கள் (வயது வரம்பு இல்லை) மற்றும் பொதுமக்கள் (15 முதல் 35 வயது வரை) ஆகியோா் இணையதளம் மூலம் பதிவு செய்ய கடைசி நாள் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com