தரங்கம்பாடி அருகேயுள்ள நல்லாடை ஸ்ரீசுந்தர நாயகி சமேதா ஸ்ரீஅக்னிஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பரணி நட்சத்திரத்துக்கு பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு பழைமை மாறால் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்காக மே 22-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி வியாழக்கிழமை 6-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, அனைத்து சந்நிதிகளிலும் தீபாராதனை நடைபெற்றது.