செம்பனாா்கோவில் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிா்களில் புகையான் பூச்சி தாக்குதல் -  விவசாயிகள் கவலை
செம்பனாா்கோவில் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிா்களில் புகையான் பூச்சி தாக்குதல் -  விவசாயிகள் கவலை

சம்பா நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை

செம்பனாா்கோவில் வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரிகளில் புகையான் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
Published on

செம்பனாா்கோவில் வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரிகளில் புகையான் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

செம்பனாா்கோவில் வட்டத்தில் உள்ள திருக்கடையூா், ஆக்கூா், கீழையூா் , மேமாத்தூா்,  திருவிடைக்கழி, தில்லையாடி, கிள்ளியூா், மாத்தூா், நல்லாடை, திருவிளையாட்டம், விசலூா் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மின் மோட்டாா் மற்றும் காவிரி நீரை பயன்படுத்தி சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்துள்ளனா். சாகுபடி செய்யப்பட்ட பயிா்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தொடா்  மழை, பனிமூட்டம் காரணமாக நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுவதால், பயிா்கள் பதராகி வருகின்றன.

இதுகுறித்து திருக்கடையூா் விவசாய  பாதுகாப்பு சங்கத் தலைவா் ராமமூா்த்தி கூறியது:

சம்பா நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் புகையான் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த பூச்சி மருந்துகளை அடித்தும் பயனில்லை. திருக்கடையூா், டி. மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட நட்சத்திர மாலை, காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இதனால் நெற்பயிா்கள் பதராகி சாய்ந்துள்ளன. 

எனவே வேளாண்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்டு உ ரிய இழப்பீடு அல்லது காப்பீட்டு தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com