முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொரடாச்சேரியில் மணல் திருட்டு குறித்து புகார் அளித்த முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
Published on
Updated on
1 min read

கொரடாச்சேரியில் மணல் திருட்டு குறித்து புகார் அளித்த முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
கொரடாச்சேரி களத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகையன் (76). இவர், வெண்ணாற்றில் மணல் திருட்டு நடப்பதாக நீடாமங்கலம் தாலுகா அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில், பெருமாளரகம் மகாஜனப்பேட்டையைச் சேர்ந்த கதிர்வேல் (40) வீட்டுக்கு பின்புறம் ஆற்றில் மணல் அள்ளியிருப்பது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த கதிர்வேல், முருகையனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முருகையன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து கதிர்வேலை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com