திருத்துறைப்பூண்டியில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி பண்டிதர் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் பிரபாகரன் (24). பொறியியல் பட்டயப் படிப்பு முடித்து விட்டு, செங்கல்பட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சொந்த ஊருக்கு வந்த இவர், தனது இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே வரும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதி படுகாயமடைந்தார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.