முதியவரை அரிவாளால் வெட்டியவர் கைது

மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு முன்விரோதம் காரணமாக முதியவரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
Published on
Updated on
1 min read

மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு முன்விரோதம் காரணமாக முதியவரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
மன்னார்குடி அருகேயுள்ள புள்ளவராயன்குடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆர். சிட்டான் (65). அதே பகுதியைச் சேர்ந்தவர் கு. சுப்பிரமணியன் (40). இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு  மதுபோதையில் இருந்த சுப்பிரமணியம் தகராறில் ஈடுபட்டு, சிட்டானை அரிவாளால் வெட்டினாராம். இதில் காயமடைந்த அவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வடுவூர் காவல் நிலைய போலீஸார்  வழக்குப் பதிந்து, சுப்பிரமணியனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com