நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் 80 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளின் பெற்றோரில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளனர். இதனால், தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் மேல் நிலைக் கல்வியில் சேர்க்க முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் புதிய கட்டடம் திறக்கப்படவுள்ளதால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இப்பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க வசதியாக இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி,நிகழ் கல்வியாண்டிலேயே 11-ஆம் வகுப்பு தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.