ஆலங்குடி குருபகவான் கோயிலில் 2-ஆவது  கட்ட லட்சார்ச்சனை தொடங்கியது

வலங்கைமான் வட்டம்  ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை விழா  வியாழக்கிழமை  தொடங்கியது.
Published on
Updated on
1 min read

வலங்கைமான் வட்டம்  ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை விழா  வியாழக்கிழமை  தொடங்கியது.
குருபகவான்  கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு கடந்த  2-ஆம் தேதி  பிரவேசம் செய்ததை முன்னிட்டு குருப்பெயர்ச்சி விழா  நடைபெற்றது. இதை முன்னிட்டு குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை கடந்த மாதம்  23-ஆம் தேதி  தொடங்கி  31-ஆம் தேதி   நிறைவடைந்தது.
 குருப் பெயர்ச்சிக்குப்பின்  வியாழக்கிழமை (செப்.7)  இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை தொடங்கியது.  லட்சார்ச்சனை காலை 9 மணி முதல்  பகல் 12 மணி வரையும் பின்னர் மாலை 4.30 மணி முதல்  இரவு 8 மணி வரையிலும்  நடைபெறும்.
லட்சார்ச்சனை கட்டணம் ரூபாய் 400 ஆகும். லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி  டாலர் பிரசாதமாக வழங்கப்படும். இந்த இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை விழா செப்டம்பர் 14-ஆம் தேதி வரை  நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பா.கலைச்செல்வி, அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் தக்கார் செ.சிவராம்குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com