மன்னார்குடியில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி, அன்னவாசல் தெருவைச் சேர்ந்தவர் சா. ராமகிருஷ்ணன், மன்னார்குடி நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான குளம், நகராட்சிக்கு உள்பட்ட 1-ஆவது வார்டு, மாளிகைமேடு பகுதியில் உள்ளது. இதில் சிலர் அனுமதியின்றி மண் அள்ளியுள்ளனர்.
இது குறித்து ராமகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து அந்த குளத்தில் மண் அள்ள வருவாய்த் துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை குளத்தைப் பார்வையிட சென்ற ராமகிருஷ்ணனையும், அவரது உதவி வழக்குரைஞர் பாலகுமாரையும், மன்னார்குடியைச் சேர்ந்த பீலாகார்த்தி உள்ளிட்ட 7 பேர் தாக்கியதாகக்
கூறப்படுகிறது.
இதையறிந்த வழக்குரைஞர்கள், ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உதவி வழக்குரைஞரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாய்க்கிழமை இரவு மன்னார்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, பீலாகார்த்தி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இப்பிரச்னையில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் கைது செய்யாமலும், மண் அள்ள பயன்படுத்திய இயந்திரம், டிராக்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யாமலும் காவல் துறையின் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகக் கூறி, மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையில் நீதிமன்றம், சார்பு நீதிமன்ற வழக்குரைகள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர். சரவணச்செல்வன் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் துரை. வீரையன், ஜீவானந்தம், ஜி. பஞ்சமூர்த்தி, கை. கலைவாணன், சங்கச் செயலர் இலக்கியதாசன் உள்ளிட்ட திராளன வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.