அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு திருவாரூர் அருகே திருநெய்ப்பேரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை திருவாரூர் அருகே அம்மையப்பனில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருவாரூர் -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போலீஸார் அங்கு சென்று மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தியதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.