முத்துப்பேட்டை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்தவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காட்டைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்(39). இவர் குடும்பப் பிரச்னை காரணமாக ஜூன் 28-ஆம் தேதி விஷம் குடித்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி செந்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.