கைதி தப்பியோட்டம்
By DIN | Published on : 01st June 2018 09:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருத்துறைப்பூண்டி நீதிமன்ற வளாகத்திலிருந்து வியாழக்கிழமை தப்பியோடிய கைதியை போலீஸார் தேடிவருகின்றனர்.
முத்துப்பேட்டை அருகேயுள்ள பேட்டை செளந்தரேசுவரர் கோயிலில் அம்மனின் தாலி உள்ளிட்ட பொருள்கள் அண்மையில் திருட்டுப் போனது. இதுதொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கொடிவயல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மனோகரன் (27) என்பவரை முத்துப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரைஆஜர்படுத்துவதற்காக திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, மனோகரன் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து, மனோகரனை தேடிவருகின்றனர்.