இலக்கிய மன்ற தொடக்க விழா
By DIN | Published on : 24th June 2018 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் இளங்கோ இலக்கிய மன்றத்தின் 64-ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் சு.தி. சுந்தர் தலைமையில் நடைபெற்ற விழாவில், மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் கோ. ஸ்ரீதரன், உயர்நிலைப்பள்ளி உதவித் தலைமையாசிரியர் எஸ். வெங்கடாசலம், முதுகலை ஆங்கில ஆசிரியை தி. சிவரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி கவிஞர் வீரமுருகேசன் பங்கேற்று, தமிழ் இசைத்தேன் எனும் தலைப்பில் இலக்கிய சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில், தமிழாசிரியர்கள் அ. பிரான்சிஸ், ந. சங்கரன், முதுகலைத் தமிழாசிரியர் கோமல் தமிழமுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.