திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே மதுபோதையில் இளைஞர்களைத் தாக்கிய வழக்கில், ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அதங்குடி சர்க்காக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவரை அதங்குடி தெற்கு சேத்தியைச் சேர்ந்த வீரையன் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டினாராம். பின்னர், தனது மகன் கனகவேல் (25) உள்ளிட்ட சிலரை அழைத்து வந்து, மணிகண்டனை வீரையன் மீண்டும் தாக்கியுள்ளார்.
இதில், மணிகண்டனுக்கு மட்டுமன்றி அவரது நண்பர் சதாம் உசேனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, கனகவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.