நீடாமங்கலத்தில் வைக்கோல் போர் எரிந்து நாசம்

நீடாமங்கலத்தில் மாட்டு வியாபாரியின் வைக்கோல் போர் சனிக்கிழமை  மாலை எரிந்து நாசமானது.

நீடாமங்கலத்தில் மாட்டு வியாபாரியின் வைக்கோல் போர் சனிக்கிழமை  மாலை எரிந்து நாசமானது.
நீடாமங்கலம் பெரியார் தெருவில் வசிப்பவர் மதி என்கிற மதியழகன் (55), மாட்டு வியாபாரியான இவருக்கு சொந்தமான வைக்கோல் போர் திடிரென தீப்பற்றி எரிந்தது. 
இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம்  தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி மற்றும் தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தால் பெரியார் தெரு பகுதி சனிக்கிழமை மாலை புகை மண்டலமாக காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com