திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஒரு சமுகத்தின் சார்பில் அதன் சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையைக் கிழித்தவர், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மன்னார்குடி- மதுக்கூர் பிரதான சாலையில் ஒரு சமுகத்தின் சங்க அலுவலகம் உள்ளது. இங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை, அண்மையில் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின்பேரில், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கூப்பாச்சிக்கோட்டை கீழத்தெருவைச் சேர்ந்த ரா. மணிகண்டன் (25), இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.