திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோயிலில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர்,திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் சன்னிதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.