திருத்துறைப்பூண்டி கல்லூரிக்கு பி.சீனிவாச ராவ் பெயர் சூட்டக் கோரிக்கை

விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஏற்படுத்திய பி.சீனிவாச ராவ் பெயரை திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஏற்படுத்திய பி.சீனிவாச ராவ் பெயரை திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடியில், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வீராச்சாமி தலைமை வகித்தார்.
தீர்மானங்கள்
தமிழகத்தில் பண்ணை அடிமைகளாய் சிதறிக் கிடந்த விவசாயத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் உரிமைகளை போராட்டங்கள் மூலம் பெற்றுத் தந்த பி.சீனிவாச ராவ் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரிக்கு பி.சீனிவாசராவ் பெயரை சூட்ட வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை, குடிமனை, மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற அக். 2 முதல் 4 -ஆம் தேதி வரை விழுப்புரத்தில் நடைபெறவுள்ள விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில மாநாட்டில், திருவாரூர் மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வை.சிவபுண்ணியம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலர் ஆர்.ஞானமோகன், மாவட்டச் செயலாளர் அ.பாஸ்கர், மாவட்டப் பொருளாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com