அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்: அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம்

கூத்தாநல்லூர் பகுதியில் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம் தெரிவித்தார். 

கூத்தாநல்லூர் பகுதியில் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம் தெரிவித்தார். 
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர். ஜீவானந்தம் கூத்தாநல்லூர் நகராட்சியில் வாக்குச் சேகரித்து பேசியது:  கூத்தாநல்லூர் நகராட்சி பகுதிக்கு அதிமுக அரசு சிறந்த முறையில் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யயும். மேலும், சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று  செயல்படுத்தப்படும். கூத்தாநல்லூர் போக்குவரத்துக்கு இடையூறாகவும், நெரிசல் மிகுந்த பகுதியாகவும் காணப்படுவதால், புறவழிச் சாலை அமைக்கப்படும், கூத்தாநல்லூருக்குத் அத்தியாவசியமான அனைத்து தேவைகளையும், செய்வதற்கு, நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சரவணனுக்கும், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் எனக்கும், இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் வேட்பாளர் ஆர். ஜீவானந்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com