"பாஜக ஆட்சியில் அரசியல் சட்டமே கேள்விக்குறியாகிவிட்டது'

பாஜக ஆட்சியில் அரசியல் சட்டமே கேள்விக் குறியாகி விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து. ராஜா கூறினார். 

பாஜக ஆட்சியில் அரசியல் சட்டமே கேள்விக் குறியாகி விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து. ராஜா கூறினார். 
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் வெள்ளிக்கிழமை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியது: திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி மறைந்த மு. கருணாநிதியின் தொகுதியாகும். எனவே, திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்திய  சரித்திரத்தில் சோதனைக்கான கட்டத்தில் இத்தேர்தல் நடைபெறுகிறது. மோடி ஆட்சி பொய்யான ஆட்சி என்பதை மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். 
மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் இஸ்லாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர்கள், கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.  மதநல்லிணக்கத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். மோடி அரசு ஆர்எஸ்எஸ்ஸின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்திய மக்கள் சுதந்திரமாகவும், சமத்துவத்துடனும், சகோதரத்துடனும் இருக்க வேண்டும். பாஜக ஆட்சியில் அரசியல் சட்டமே கேள்விக்குறியாகி விட்டது.
ஒற்றுமையாக வாழும் மக்களை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். இந்தியாவை மதவெறி நாடாக்க முயற்சிக்கிறார்கள். இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும். மோடி ஆட்சி ஏழைகளை அழிக்கும் ஆட்சி. மக்களுக்கான நல்லாட்சி மத்தியில் அமைய வேண்டும். அதற்கு நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளர் எம். செல்வராசுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் பூண்டி கே. கலைவாணனுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்றார் து. ராஜா. கூட்டத்தில், திமுக நகரச் செயலர் காதர் உசேன், காங்கிரஸ் நகரத் தலைவர் சாம்பசிவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் சுதர்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com