திருவாரூர் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி தொடர்பான கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
இக்கண்காட்சியை கல்லூரி அறங்காவலர் குழு உறுப்பினர் பெரோஸ் ஷா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி தலைமை வகித்தார். இதில் மாணவிகள், பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் பெஜிலா பெரோஸ் மற்றும் துறைப் பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.