ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஏப்ரல் 7-ஆம் தேதி பக்தாள் உத்ஸவமும்,  9-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கு வீதியுலாவும்,  10- ஆம் தேதி வசந்தன் உத்ஸவமும் நடைபெற்றது. தொடர்ந்து, ஏப்ரல் 11-இல் இந்திர விமானத்திலும், 12-இல் யானை வாகனத்திலும், 13-இல் பூத வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பின்னர், ஏப்ரல் 14- ஆம் தேதி தென்பாதி டி. எஸ். நாராயணசாமி நாயுடு  குடும்பத்தினர் உபயதாரர்களாக இருந்து,  சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர்  வீதியுலா நடைபெற்றது.
இவ்விழாவில், ஏப்ரல்16-ஆம் தேதி தேரோட்டமும், 18-ஆம் தேதி பிராயச்சித்தாபிஷேகமும், 23-ஆம் தேதி தெப்ப உத்ஸவமும், 25-ஆம் தேதி சர்வ பிராயச்சித்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் எம். முருகையன், கணக்கர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com