திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் தண்டலைச்சேரியில் உள்ள பாரதிதாசன் உறுப்புக் கல்லூரியில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து மாணவ, மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஏப்ரல் 18- ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிப்பது மற்றும் வாக்களிக்கச் செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டிய தேர்தல் ஆவணங்கள் குறித்தி நிகழ்ச்சியில் விளக்கிக் கூறப்பட்டது.
இதில், கல்லூரி முதல்வர் சக்திவேல், நகராட்சி ஆணையர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் நா. வெங்கடாசலம் மற்றும் மகளிர் குழுவினர் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.