வாக்காளர்கள் யாரிடமும் வாக்குக்கு பணம் வாங்காமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியது: வாக்குகளில் தீர்ப்பு வழங்கும் உரிமை ஜனநாயக நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவித அச்சுறுத்தலுக்கும், ஆசைகளுக்கும் ஆளாகாமல் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும். 100 சதவீத வாக்குப் பதிவு நடந்தால்தான் உண்மையான ஜனநாயக தீர்வு கிடைக்கும். ஜனநாயகம் தழைக்கவும், எதிர்கால சந்ததிகள் பலன் பெறவும் இந்த தேர்தல் உரிமையை முறையாக பயன்படுத்த வேண்டும். பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் இந்தியாவின் பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே, வாக்குகளுக்கு பொருளாகவோ, பணமாகவோ அரசியல் கட்சிகளிடமிருந்து எதையும் பெறாமல், நேர்மையான முறையில் இந்த ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.