விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
By DIN | Published On : 23rd April 2019 10:03 AM | Last Updated : 23rd April 2019 10:03 AM | அ+அ அ- |

நன்னிலம் அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன் (60). இவர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் மகிழஞ்சேரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, இவரைத் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டதாம். தகவலறிந்து, அங்கு வந்த நன்னிலம் போலீஸார் உலகநாதனின் சடலத்தை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஆண்டிப்பந்தல் பகுதியில் சிசிடிவி கேமராவில் பார்த்து ஆராய்ந்து தேடி வருகின்றனர்.