பேரளம், அதம்பார், வேலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.6) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பேரளம் துணைமின் நிலையம், அதம்பார் மற்றும் வேலங்குடி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், பேரளம் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூர், பூந்தோட்டம் ஆகிய பகுதிகளுக்கும், அதம்பார் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பாகசாலை, விளாகம், அதம்பார், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம் பகுதிகளுக்கும், வேலங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, எடக்குடி பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.