கட்டுரைப் போட்டி: மாணவிக்கு ரொக்கப்பரிசு
By DIN | Published On : 09th August 2019 07:00 AM | Last Updated : 09th August 2019 07:00 AM | அ+அ அ- |

மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில், மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். ரேஷ்மா சிறப்பிடம் பெற்றுள்ளார். அவருக்கு புதன்கிழமை ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கலூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி ஆர்.ரேஷ்மா கலந்துகொண்டு, இரண்டாமிடம் பெற்றார்.
அவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.7 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளியின் பெற்றோர் சங்கத் தலைவர் சீ.மோகன்தாஸ், தலைமை ஆசிரியர் ஆர்.சங்கரநாராயணன், உதவி தலைமையாசிரியர் ஜி.மனோகரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.