திருவாரூரில் சங்கர் ஐஏஎஸ் அகாதெமியின் இலவச டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்க உள்ளன.
இதுகுறித்து திருவாரூர் கிளைத் தலைவர் சூரிய நாராயணன் வெளியிட்ட அறிக்கை: திருவாரூரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாதெமியின் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான இலவச குறுகிய கால பயிற்சி வகுப்புகள், ஆகஸ்ட் 17 முதல் 24-ஆம் தேதி நடைபெற உள்ளன. பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், நேதாஜி சாலையில் உள்ள அகாதெமியை நேரடியாகவோ அல்லது 97877 34943, 04366-222972 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 25-ஆம் தேதி மாதிரித் தேர்வானது, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 25 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள்www.shankariasacademy.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.