கூத்தாநல்லூர் சாலைகளில் ஊசிக் கோபுர விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

கூத்தாநல்லூர் பகுதியில் பிரதான சாலைகளில் ஊசிக் கோபுர விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கூத்தாநல்லூர் பகுதியில் பிரதான சாலைகளில் ஊசிக் கோபுர விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்  அப்துல் அலீம் கூறியது: கூத்தாநல்லூர் நகராட்சி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஓராண்டுக்குப் பிறகுதான் தாலுகாவாக செயல்படத் தொடங்கியது.
சின்ன சிங்கப்பூர் என்ற பெயர் மட்டும்தான் உள்ளது. அதற்கேற்றபடி தெரு விளக்குகள் அமைக்க வில்லை. லெட்சுமாங்குடி பாலம் அருகே ஊசிக்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கூத்தாநல்லூர் பெரியப்பள்ளி வாயில், வடபாதிமங்கலம், பழையனூர், தென்கோவனூர், வடகோவனூர், பண்டுதக்குடி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்வதற்காக பயணிகள் நிற்கக் கூடிய இடமான பாய்க்காரப்பாலம், புதிய நகராட்சி அருகேயுள்ள பழுதடைந்த புதிய பேருந்து நிலையம், திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில், ஊசிக் கோபுர  விளக்குகள் அமைக்க வேண்டும்.
மேலும், லெட்சுமாங்குடி பாலத்திலிருந்து திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலை, வடபாதிமங்கலம் - கொரடாச்சேரி பிரதானச் சாலை உள்ளிட்ட 4 சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். லெட்சுமாங்குடி பாலம் ,இந்தியன் வங்கி, அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com